தழிழகத்தில்‌ +2 பொதுத்தேர்வு மதிப்பெண்‌ அடிப்படையில்‌ மட்டுமே மருந்துவ சேர்க்கை

0
264

தழிழகத்தில்‌ +2 பொதுத்தேர்வு
மதிப்பெண்‌ அடிப்படையில்‌ மட்டுமே மருந்துவ சேர்க்கை

சென்னை, மே 23: தமிழகத்தில்‌ பிளஸ்‌ 2:
பொதுத்தேர்வில்‌ பெறும்‌ மதிப்பெண்‌ அடிப்‌படையில் மட்டுமே மருத்துவசேர்க்கை நடைபெறும்‌. நீட்‌ தேர்வு தமிழகத்தில்‌ நடைபெறக்‌
கூடாது என மாநில கல்வி அமைச்சர்களுக்‌கான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ தமிழக
அமைச்சர்கள்‌ உறுதிபடத்‌ தெரிவித்தனர்‌.

இது குறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

மத்திய அரசின்‌
பள்ளி கல்வித்‌ துறை சிபிஎஸ்‌இ முறையில்‌
செயல்படும்‌. பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ பிளஸ்‌ 2 வகுப்பு இறுதி தேர்வு
குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்‌களுக்கான ஆலோசனைக்‌ கூட்டம்‌ இணையவழியில்‌ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்‌றது. இந்தக்‌ கூட்டத்தில்‌ உயர்கல்வித்‌ துறை
அமைச்சர்‌ பொன்முடி, பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு தமிழகத்தின்‌ நிலைப்‌பாட்டை தெரிவித்திருந்தனர்‌.

மேலும்‌ இக்கூட்டத்தில்‌ மாநில அளவில்‌
நடைபெறும்‌ பிளஸ்‌ 2 வகுப்பு அரசு பொதுத்‌தேர்வுகள்‌ குறித்தும்‌, அதற்குப்‌ பிறகு மாணவர்கள்‌ எதிர்கொள்ளும்‌ பல்வேறு நுழைவுத்‌தேர்வுகள்‌ நடத்துவது குறித்தும்‌ விவாதிக்கப்‌பட்டது.

இந்தக்‌ கூட்டத்தில்‌ கரோனா நோய்த்‌
தொற்று பரவி வரும்‌ இக்காலகட்டத்தில்‌
மாணவர்களின்‌ பாதுகாப்பைக்‌ கருத்தில்‌
கொண்டு பிளஸ்‌ 2 வகுப்பு தேர்வுகள்‌ நடத்‌தும்‌ முறைகள்‌ குறித்து தமிழக அரசின்‌ கருத்‌துகளை பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌
அன்பில்‌ மகேஷ்‌ எடுத்துரைத்தார்‌. மேலும்‌
தமிழக அரசின்‌ இறுதி நிலைப்பாட்டை
முதல்வருடன்‌ கலந்து ஆலோசித்து மத்தியஅரசிற்கு தெரிவிப்பதாகவும்‌ கூறியிருந்தார்‌.

இந்தக்‌ கூட்டத்தில்‌ பேசிய உயர்கல்வித்‌
துறை அமைச்சர்‌ பொன்முடி தமிழக நீட்‌ தேர்வு கூடாது என்றும்‌, வழக்கம்‌
போல பிளஸ்‌ 2 வகுப்பு இறுதி தேர்வு மதிப்‌பெண்‌ அடிப்படையிலே மாநில அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள மருத்துவக்‌ கல்லூரிக்கு சேர்க்கை நடைபெற வேண்டும்‌ என்‌றும்‌ உறுதிபடத்‌ தெரிவித்தார்‌. ஆனால்‌, அவரது கருத்து தவறாகப்‌ புரிந்து கொள்ளப்‌பட்டு, தமிழக அரசு தனியாக நீட்‌ தேர்வை
மாநில அளவில்‌ நடத்த இருப்பதாக சில
ஊடகங்களில்‌ செய்தி வந்துள்ளது. இது
முற்றிலும்‌ தவறானது ஆகும்‌. தமிழகத்தில்‌
நீட்‌ தேர்வு மூலம்‌ சேர்க்கை நடைபெறக்‌
கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்‌கள்‌ பயிலும்‌ பிளஸ்‌ 2 வகுப்பு இறுதித்‌தேர்‌வில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மட்டுமே மருத்துவப்‌ படிப்புகளுக்கான
சேர்க்கைநடைபெற வேண்டும்‌ என்ற தமிழகஅரசின்‌ கொள்கையில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லை என அரசின்‌ செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.