TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06

0
4650

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST
(FREE TEST BATCH)

ஜூன்-11 முதல் ஜூலை-19 வரை

அனைவருக்கும் வணக்கம்..
நமது தமிழ் மடல் இணையம் TNPSC GROUP-04/TET தேர்வர்களுக்காக சேலஞ்ச் தேர்வு தொகுப்பினை அறிமுகப்படுத்துகிறது. இந்த தேர்வில் 75 வினாக்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப் பகுதியிலிருந்து வழங்கப்படும். இந்த தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் TNPSC தேர்வு வினாக்கள் போல தரமானதாக இருக்கும். இந்த தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இரவு 9 மணிக்கு பகிரப்படும். இந்த தேர்வில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். கீழே சேலஞ்ச் தேர்வு தொகுப்பிற்கான கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணைப்படி தேர்வுக்கு தயாராகி தேர்வில் வெற்றி பெற்று பயன் பெறுங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06

(NAME, WHATSAPP NO கொடுத்தால் மட்டுமே கீழே SUBMIT ஆகும் என்பதால் தவறாது பதிவு செய்யவும்)

Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06

1. 
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?

2. 
___ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை

3. 
மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?

4. 
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?

5. 
திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது?

6. 
புழை என்பதன் பொருள்

7. 
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற பாடலில் நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது

8. 
நன்னூலின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு

9. 
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது இவை அனைத்தும் மொழியே ஆகும் எனக் கூறியவர்

10. 
நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______

11. 
பாண்டம் பாண்டமாக களிமண் வனையப்படுகிறது. ஆனால் பாண்டத்தின் பயன் அதன் காலிப் பகுதியால்- என்று குறிப்பிட்டவர்

12. 
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்?

13. 
சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?

14. 
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது?

15. 
தமிழ் வலஞ்சுழி எழுத்துகளில் பொருந்தாதது எது?

16. 
அருள்நெறி அறிவைத் தரலாகும்.. ^ அதுவே தமிழன் குரலாகும்- என்ற அடிகளில் இடம் பெற்றுள்ளவை

17. 
நெறி என்னும் சொல்லின் பொருள்

18. 
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளபோல்- என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

19. 
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்

20. 
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகமான முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு

21. 
இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ?

22. 
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?

23. 
முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி என்று பாடியவர்

24. 
மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?

25. 
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ?

26. 
இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதினை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்?

27. 
பணிநிலம் என்பதன் பொருள் ?

28. 
புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன்

29. 
பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

30. 
தமிழ்ச்செல்வன் என்ற பெயரின் மாத்திரை அளவு என்ன?

31. 
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?

32. 
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?

33. 
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?

34. 
இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

35. 
இராவண காவியத்தில் உள்ள ஐந்து காண்டங்களில் இடம்பெறாத காண்டம் எது?

36. 
கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்?

37. 
ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?

38. 
போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______

39. 
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?

40. 
தமிழென் கிளவியும் அதனோ ரற்றே- இவ்வடிகள் இடம்பெறும் நூல்?

41. 
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்?

42. 
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

43. 
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்

44. 
தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______

45. 
ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?

46. 
தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு

47. 
கந்தம் என்பதன் பொருள் ?

48. 
திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் திராவிடர்களை மலைநில மனிதர்கள் என அழைத்தவர்

49. 
தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச் செல்வது ஒரு நாளும் இல்லை என்று பாடியவர்

50. 
மொழிக்குரிய ஒழுங்கு முறை எது?

51. 
ஐங்குறுநூறு நூலில் பேயனார் கூறும் மழைக்கால மலர்களில் இடம்பெறாத மலர் எது?

52. 
உபகாரி என்பதன் பொருள்?

53. 
உலக தாய்மொழி தினம்?

54. 
நட்டல் என்பதன் பொருள்?

55. 
காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்- யாழ்வரை தங்கி யாங்கு- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

56. 
குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாம் பகுதி எது?

57. 
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்?

58. 
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?

59. 
சிறந்த தமிழ் கவிதைகளைத் தொகுத்து "கொங்குதேர் வாழ்க்கை" என்ற தலைப்பில் நூலாக்கியவர்

60. 
வீராயி என்னும் நூலின் ஆசிரியர்?

61. 
மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்?

62. 
எந்த நான்கும் சிறந்த அரசின் செயல்கள் என வள்ளுவர் கூறுகின்றார்?

63. 
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?

64. 
காலமும் இலக்கணக்குறிப்பு

65. 
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்?

66. 
எந்த ஆற்றின் நடுவே உள்ள மணல் குன்றில் 30 ஆண்டுகள் கடின உழைப்பால் ஜாதவ் பயேங் காட்டினை உருவாக்கினார்

67. 
உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?

68. 
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____

69. 
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?

70. 
பகை வென்ற கிரம் பாடும் பரணி வகை-செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை- என்ற பாடலைப் பாடியவர்

71. 
மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்?

72. 
தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் உள்ள இயல்கள் எத்தனை?

73. 
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?

74. 
நாகசுர கருவிகள் செய்ய பயன்படும் மரம் எது?

75. 
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________