பிப்ரவரி 28:
தேசிய அறிவியல் நாள்!
இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர்,
சர்.சி.வி.ராமன் என்றழைக்கப்படும் சந்திர சேகர வெங்கட்ராமன்.
இவர், 1928இல் ‘ஒளி புகக்கூடிய ஓர் ஊடகத்தின் வழியாகப் பாயும் ஒளியின் அலைநீளம் ஏன் மாறுகிறது’ என்பதை விளக்கினார்.
இது அவரது கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டு, ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது.
இதற்காக 1930இல் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிப்ரவரி 28 அன்றுதான் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், அந்த நாளை தேசிய அறிவியல் நாளாக 1986 இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய மன்றம் (National Council for Science and Technology) அறிவித்தது.
இதன்படி 1987முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் நாளை இந்திய அரசு கொண்டாடி வருகிறது.
1999 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகின்றன.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாள் கருப்பொருள், ‘உலக நலனுக்கான உலக அறிவியல்’ (Global Science for Global Wellbeing).