உவமை கவிஞர் சுரதா பற்றிய குறிப்புகள்-TNPSC NOTES

0
589

நவ.23:

இன்று உவமை கவிஞர் சுரதா பிறந்த நாள்!

👉கவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கலைமாமணி, கவிமன்னர் என அழைக்கப்படுபவர் ராசகோபாலன்.

👉இவர் தஞ்சை மாவட்டம், பழையனூரில் 1921-ல் நவம்பர் 23-ம் தேதி பிறந்தார்.

👉சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை கற்று தேர்ந்தார்.

👉பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் தன் பெயரை சுப்புரத்தினதாசன் ஆக மாற்றினார்.

👉சுப்புரத்தினதாசனை சுருக்கி சுரதா என மாற்றிக் கொண்டார்.

👉1944-ல் மங்கையர்கரசி திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.

👉இவரது ‘தேன்மழை’ கவிதை நூலுக்கு தமிழக அரசு 1969-ல் விருது வழங்கியது.

👉1972-ல் கலைமாமணி விருது பெற்றார்.

👉திருச்சி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

👉“இரட்டை கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது கவிதை வரிகள் மிகவும் புகழ்பெற்றது.