சுதந்திர போராட்டத்தில் தமிழக தீவிரவாதிகள் பங்கு-இந்திய தேசிய இயக்கம்-TNPSC NOTES

0
706

சுதந்திர போராட்டத்தில் தமிழக தீவிரவாதிகள் பங்கு


காங்கிரஸ் தீவிரவாத தலைவர்கள்

  1. டிஎம். நாயர்.
  2. ஏ. இராமசாமி ஐயங்கார்.
  3. வ.உ. சிதம்பரம் பிள்ளை ‌
  4. சுப்பிரமணிய சிவா.
  5. வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்.
  6. வாஞ்சிநாதன்
  7. எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்.
  8. டி. ரெங்காச்சாரி.
  9. அரவிந்த கோஷ்.
  10. சுப்பிரமணிய பாரதியார்.
  11. நீலகண்ட பிரம்மச்சாரி.
  12. சுதேசி பத்மநாப ஐயர்.
  • வ.உ.சி தமிழ்நாட்டுத் திலகர். தமிழகத்தின் தீவிரவாத தந்தை.
  • தமிழ்நாட்டின் திலகரின் தளபதிகள் வ.உ‌சி., சுப்பிரமணிய சிவா.
  • ஆங்கில அரசின் செயல்பாடுகளை பத்திரிகைகள், துண்டு பிரசுரங்கள், கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றனர்.

1. சுதேசி இயக்கம்.

  • வங்கப்பிரிவினைக்கு எதிராக தோன்றிய இயக்கம்.
  • வங்காளம், பஞ்சாப், மகாராட்டிர மாகாணங்களில் புகழ்பெற்ற தலைவர்கள் தோன்றினர்.

  • சுதேசி என்றால் உள்நாட்டு பொருள்.
  • முழக்கம் “வந்தே மாதரம்”.
  • கொள்கை “பூரண சுயராஜ்யம் அல்லது முழு விடுதலை”
  • 1905ல் தமிழக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
  • தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் – வ.உ.சி., வி சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுதேந்திரநாத் ஆர்யா.
  • தமிழகத்தில் சுதேசி இயக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்றது. வ.உ.சி கிராமம் தோறும் சென்று கருத்துக்கள் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  • தலைவர்கள், மாணவர்கள், வழகறிஞர்கள், தொழிலாளிகள் கூடி வட்டார மொழியில் கூட்டங்கள் நடத்தினர்.
  • சென்னையில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் சுதேசி தொடர்பான கூட்டங்கள் அதிகளவில் நடைபெற்றது.
  • 1907ல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னை கடற்கரை பகுதியில் ஆற்றிய உரைகள் அதிக உத்வேகத்தை ஏற்படுத்தியது. மதுரை வைத்தியநாத ஐயர் இதன் மூலம் காங்கிரஸில் தீவரமாக பங்காற்றினார்
  • மக்களை ஒன்றுதிரட்ட முதன்முதலில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. காரணம் சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்தி மிகுந்த பாடல்கள்.
  • சுதேசி கருத்துக்களை சுதேச மித்திரன், இந்தியா ஆகிய பத்திரிக்கைகள் அதிகம் மக்களிடம் கொண்டு சேர்த்தன.
  • 1905 – 1907 காலப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை அறிக்கைகள் மாணவர்கள் ஆபத்தானவர்கள், அவர்களின் நடவடிக்கைகள் ஆட்சிக்கு எதிரானவை என குறிப்பிடப்பட்டுள்ளன.