[tdb_mobile_menu inline="yes" icon_color="#ffffff" icon_size="eyJhbGwiOjIyLCJwaG9uZSI6IjI3In0=" icon_padding="eyJhbGwiOjIuNSwicGhvbmUiOiIyIn0=" tdc_css="eyJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMiIsIm1hcmdpbi1sZWZ0IjoiLTEzIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=" menu_id=""]
[tdb_header_logo align_horiz="content-horiz-center" align_vert="content-vert-center" media_size_image_height="180" media_size_image_width="544" image_width="eyJwb3J0cmFpdCI6IjE4NiIsInBob25lIjoiMTgwIn0=" show_image="eyJhbGwiOiJub25lIiwicGhvbmUiOiJibG9jayJ9" tagline_align_horiz="content-horiz-center" text_color="#ffffff" ttl_tag_space="eyJhbGwiOiItMyIsInBvcnRyYWl0IjoiLTIifQ==" tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiLTgiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==" image=""]
[tdb_mobile_search inline="yes" float_right="yes" tdc_css="eyJwaG9uZSI6eyJtYXJnaW4tcmlnaHQiOiItMTgiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" icon_color="#ffffff" tdicon="td-icon-magnifier-big-rounded"]
[tdb_header_weather icon_color="#ffffff" temp_color="#ffffff" loc_color="#ffffff" inline="yes" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMzIiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZSI6eyJtYXJnaW4tcmlnaHQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" location="New York" f_temp_font_line_height="28px" f_loc_font_line_height="28px"][tdb_header_date inline="yes" date_color="#ffffff" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMzIiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZSI6eyJtYXJnaW4tcmlnaHQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" f_date_font_line_height="28px"][tdb_header_user inline="yes" logout_tdicon="td-icon-logout" usr_color="#ffffff" log_color="#ffffff" log_ico_color="#ffffff" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMTQiLCJkaXNwbGF5IjoiIn19" photo_size="19" f_usr_font_line_height="28px" f_log_font_line_height="28px" show_log=""][tdb_mobile_horiz_menu inline="yes" menu_id="" f_sub_elem_font_weight="" text_color="#ffffff" f_elem_font_size="11" f_elem_font_weight="400" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7ImRpc3BsYXkiOiJub25lIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" text_color_h="#4db2ec" elem_padd="0" f_elem_font_line_height="28px" elem_space="16" sub_left="-18" f_sub_elem_font_line_height="1.2" main_sub_tdicon="td-icon-down"]
[tdb_header_logo image="" image_retina="" align_vert="content-vert-center" align_horiz="content-horiz-center" image_width="eyJwb3J0cmFpdCI6IjIyMCJ9"]
[tdb_header_menu mc1_title_tag="p" main_sub_tdicon="td-icon-down" sub_tdicon="td-icon-right-arrow" mm_align_horiz="content-horiz-center" modules_on_row_regular="20%" modules_on_row_cats="25%" image_size="td_324x400" modules_category="image" show_excerpt="none" show_com="none" show_date="" show_author="none" mm_sub_align_horiz="content-horiz-right" mm_elem_align_horiz="content-horiz-right" inline="yes" menu_id="" mm_align_screen="yes" f_elem_font_family="" f_elem_font_size="eyJwb3J0cmFpdCI6IjExIn0=" mm_width="1300" mm_subcats_bg="#ffffff" mm_elem_border_a="0 1px 0 0" mm_elem_padd="eyJhbGwiOiIycHggMjJweCIsInBvcnRyYWl0IjoiMCAxNHB4In0=" mm_sub_padd="eyJhbGwiOiIxNnB4IDAiLCJwb3J0cmFpdCI6IjE0cHggMCJ9" f_title_font_size="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxMyJ9" f_title_font_line_height="1.2" art_title="3px 0" f_mm_sub_font_size="eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" mm_child_cats="10" mm_elem_border="0 1px 0 0" mm_height="eyJhbGwiOiIzNDUiLCJsYW5kc2NhcGUiOiIzMDAiLCJwb3J0cmFpdCI6IjI0MCJ9" mm_sub_width="eyJsYW5kc2NhcGUiOiIxNjAiLCJwb3J0cmFpdCI6IjE0MCJ9" mm_padd="eyJwb3J0cmFpdCI6IjE0In0=" modules_gap="eyJwb3J0cmFpdCI6IjE0In0=" elem_padd="eyJwb3J0cmFpdCI6IjAgMTJweCJ9" f_elem_font_line_height="eyJwb3J0cmFpdCI6IjQ4cHgifQ==" video_icon="eyJwb3J0cmFpdCI6IjI0In0=" all_modules_space="26" tds_menu_sub_active="tds_menu_sub_active1" tds_menu_sub_active2-line_color="" tds_menu_active="tds_menu_active1"][tdb_header_search inline="yes" toggle_txt_pos="after" form_align="content-horiz-right" results_msg_align="content-horiz-center" image_floated="float_left" image_width="30" image_size="td_324x400" show_cat="none" show_btn="none" show_date="" show_review="" show_com="none" show_excerpt="none" show_author="none" art_title="0 0 2px 0" all_modules_space="20" tdicon="td-icon-magnifier-big-rounded" icon_size="eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTgifQ==" tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiMSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OH0=" modules_on_row="eyJhbGwiOiI1MCUiLCJwb3J0cmFpdCI6IjUwJSIsImxhbmRzY2FwZSI6IjUwJSJ9" meta_info_horiz="content-horiz-left" form_width="600" input_border="0 0 1px 0" modules_divider="" form_padding="eyJwb3J0cmFpdCI6IjIwcHggMjBweCAyMHB4IiwiYWxsIjoiMzBweCJ9" arrow_color="#ffffff" btn_bg_h="rgba(0,0,0,0)" btn_tdicon="td-icon-menu-right" btn_icon_pos="after" btn_icon_size="7" btn_icon_space="8" f_title_font_family="" f_cat_font_family="" f_cat_font_transform="uppercase" f_title_font_weight="" f_title_font_transform="" f_title_font_size="13" title_txt_hover="#4db2ec" results_limit="6" float_block="yes" icon_color="#000000" results_border="0 0 1px 0" f_title_font_line_height="1.4" btn_color="#000000" btn_color_h="#4db2ec" all_underline_color="" results_msg_color_h="#4db2ec" image_height="100" meta_padding="3px 0 0 16px" modules_gap="20" mc1_tl="12" show_form="yes" f_meta_font_weight="" h_effect="" results_msg_padding="10px 0" f_results_msg_font_style="normal" video_icon="24" modules_divider_color="" modules_border_color="" btn_padding="0" form_border="0" form_shadow_shadow_offset_vertical="3" results_padding="0 30px 30px" btn_bg="rgba(0,0,0,0)" icon_padding="eyJhbGwiOjIuNCwicG9ydHJhaXQiOiIyLjYifQ=="]
Home Blog Page 817

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம் வந்த கதை தெரியுமா..?

      தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் காசி நகருக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தை மேற்கொண்டார். அந்த நேரத்தில் கல்கத்தாவில் ஆங்கில ராஜபிரதிநிதியாக இருந்த அதிகாரி, சரபோஜி மன்னரை சந்திக்க முடிவு எடுத்தார். 
      அந்த ஆங்கிலேய ராஜ பிரதிநிதி, தமிழ் நூல்கள் பலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பினை படித்துப் பார்த்து, வியந்து போய் தமிழ் மொழி மீது பற்று அதிகமாக கொண்டிருந்தார். அதனால் கல்கத்தா வரும் தமிழ் மன்னரை சந்தித்து, திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் நூல்களின் பெருமையைப் பற்றி கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அதனாலேயே சரபோஜி மன்னரை சந்திக்க அவர் முடிவெடுத்திருந்தார்.
       அதன்படியே சரபோஜி மன்னரும் ஆங்கிலேய ராஜ பிரதிநிதியும் சந்தித்துக் கொண்டார்கள். சந்திப்பின் போது ஆங்கிலேய பிரதிநிதி, சரபோஜி மன்னரிடம் தமிழ் நூல்களைப் பற்றி கேட்க ஆரம்பித்தார். “திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பே இவ்வளவு இனிதாக இருக்கும் பொழுது, அதன் மூலம் எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறேன். ஆதலால் திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் நூல்களின் மூல நூல்களை பற்றி நான் உங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். அதைப்பற்றி சொல்லுங்கள்” என்று ஆங்கிலப் பிரதிநிதி கேட்டார்.
      சரபோஜி மன்னர் மராட்டிய வழிமரபினர். அதாவது சரபோஜி மன்னரின் தாய் மொழி மராத்தி. ஆதலால் தமிழ் மொழியைப் பற்றி அந்த அளவிற்கு தெரியாது.
       அந்த இடத்தில் சற்று சுதாரித்துக் கொண்ட சரபோஜி மன்னர், “நான் நிறைய நூல்கள் வாசித்து உள்ளதால், நீங்கள் கேட்கும் குறிப்பிட்ட நூல்களை மட்டும் என்னால் எடுத்துச் சொல்ல முடியாது. ஆதலால் நான் தஞ்சாவூருக்கு சென்றதும், அங்குள்ள மூல நூல்களின் பெயர் பட்டியலையும், அதனோடு மூல நூல்களையும் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார் சரபோஜி மன்னர். அதற்கு அந்த ஆங்கில ராஜ பிரதிநிதி சம்மதித்து வழியனுப்பி வைத்தார்.
       தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழ் நூல்களைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் வாழ்ந்தது பெரும் வெட்கக்கேடு என்று நொந்து போனார் சரபோஜி மன்னர். அதைத் தொடர்ந்து அந்த ஆங்கிலேய ராஜ பிரதிநிதிக்கு தேவையான நூல்களின் பட்டியலையும், அதன் மூல நூல்களையும் அனுப்பி வைத்தார் சரபோஜி மன்னர்.
     அதன்பின்னர் பல வருடங்கள் தேடித்தேடி, தமிழ் நூல்களைப் பற்றிய பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சரபோஜி மன்னர், கிடைத்த ஆயிரக்கணக்கான நூல்களை கொண்டு உருவாக்கியதே தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையம்.

பயமா… எனக்கா….! – ஒரு தன்னம்பிக்கை கதை..

              ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர். தனது வலிமையாலும் புத்திசாலித்தனத்தாலும் ஐரோப்பிய கண்டத்தையே ஆட்டி படைத்தவர். எதற்கும் துணிந்தவர். “அஞ்சாநெஞ்சன்” என்று போற்றப்படும் இவர், ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது போல இளம் வயதிலேயே பயம் அறியாதவராய் இருந்தார். அதற்குச் சான்றாகக் கீழ்வரும் சம்பவத்தினை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
           நெப்போலியன் பிரெஞ்சு மாகாணத்தின் பிரபலமான பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார். போதுமான அளவு கல்வியறிவு எட்டவில்லை என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருந்து வந்தான். அப்படி இருக்கையில் ஒரு நாள் அவனருகில் இருப்பவனின் பொருள் ஒன்று காணாமல் போய்விட்டது. அதை நெப்போலியனை தவிர வேறு யாரும் எடுத்திருக்க முடியாது என்று யூகித்த அந்த மாணவன், உடனடியாக ஆசிரியரிடம் நெப்போலியன் திருடியதாக கூறினான்.
           இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த ஆசிரியர், நெப்போலியனை தனி அறைக்கு அழைத்துச் சென்று, பிரம்பால் எவ்வளவு அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவனை அடித்து விட்டார். நெப்போலியன், ஆசிரியர் அடித்த அடிகளை தாங்கிக் கொண்டு அமைதியாக வெளியே வந்தான். அடுத்த நாளில் அந்த மாணவனின் பொருள் அவனுக்கு கிடைத்துவிட, நெப்போலியன் திருடவில்லை என்பதை அந்த ஆசிரியரிடம் வந்து அந்த மாணவன் கூறினார்.
         உடனே அந்த ஆசிரியர் நெப்போலியனை அழைத்து, “நீ திருடவில்லை என்பதை நான் அடிக்கும் போது என்னிடம் கூறியிருக்கலாம் அல்லவா..?தேவையில்லாமல் அடிவாங்கி இருக்க மாட்டாய்..” என்று சற்று வருத்தத்தோடு கூறினார்.
         அதற்கு நெப்போலியன், “நீங்கள் அடிப்பதற்கு முன்னரே என்னிடம் அதை பற்றி கேட்டிருந்தால், நான் எடுக்கவில்லை என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் அடிக்கும் பொழுது கேட்டதால் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை நீங்கள் அடிக்கும் பொழுது நான் திருடவில்லை என்று கூறியிருந்தால் நான் பயந்துபோய் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பீர்கள். நான் பயந்து விட்டேன் என்று கூட யாரும் நினைக்கக் கூடாது. அதுதான் எனக்கு வலிக்குமே தவிர, நீங்கள் அடிப்பது ஒன்றும் எனக்கு வலிக்காது” என்று பட்டென்று கூறினான் நெப்போலியன். இந்த அஞ்சாத குணம் தான் அவனை ஐரோப்பியாவினை ஆள வைத்தது.

எங்களுக்கா ஆங்கிலம் தெரியாது..! சவால் விட்டு வெள்ளையர்களின் மூக்கறுத்த விவேகானந்தர்…

        ஒருமுறை விவேகானந்தர், வெள்ளையர்களோடு விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கு பேசிய வெள்ளையர் ஒருவர், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவதாகவும், உச்சரிப்புகளை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல் இருப்பதாகவும், ஆங்கிலத்தை இந்தியர்களைப் போல யாராலும் பிழையோடு பேச முடியாது எனவும் இந்தியர்களின் ஆங்கில அறிவைப் பற்றி பேசி, இந்தியர்களை மட்டம் தட்டினார். 
      அதை கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர், இந்தியர்களை மட்டம் தட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்தார். அவர் நேரடியாக ஆங்கிலேயர்களை பார்த்து, “உங்களைவிட ஆங்கிலத்தில் நாங்கள் தான் அதிகமாக புலமை பெற்று இருக்கிறோம்; நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு” என்றார். 
     “நீங்கள் சொல்வதை நிரூபிக்க முடியுமா சுவாமி..!” என்று அந்த வெள்ளைக்காரர் நக்கலுடன் கேட்டார். 
     உடனே விவேகானந்தர் ஆங்கிலேயர்களை பார்த்து, “சவாலுக்கு தயாரா..?” என்று கேட்டார். 
        “நாங்கள் தயார்” என்று வெள்ளையர்களும் ஒத்துக்கொள்ள, விவேகானந்தர் அவர்களிடம் ஒரு சவாலை விடத் தொடங்கினார். சவால் என்னவென்றால் “ஆங்கிலத்தின் ஒரு வார்த்தையை ஒரு சொற்றொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை அர்த்தத்தோடு பயன்படுத்த வேண்டும். அதாவது மூன்று வார்த்தைகள் தொடர்ந்து இருந்து, அந்த சொற்றொடர் நிறைவான பொருளோடு பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றார். 
       அனைத்து வெள்ளையர்களும் விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் .உடனே விவேகானந்தர் சிரித்தபடியே “நான் சொல்கிறேன்” என்று கீழ்க்கண்ட வாக்கியத்தை சொல்லத் தொடங்கினார். 
“You can never start a sentence with ‘because’ because ‘because’ is a conjunction” 
இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விவேகானந்தரின் ஆங்கிலப் புலமையை பார்த்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். தான் இந்தியர்களைப் பற்றி தரக்குறைவாக பேசியது தவறு என்று அந்த ஆங்கிலேயர் மன்னிப்பு கேட்க, விவேகானந்தர் கம்பீரத்தோடு சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

உஷாரய்யா உஷாரு-06

      ராம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருருந்தான். அவனது மனைவி சுகந்தி, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். இவர்களுக்கு சம்பத், வினோத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 
       ஒருநாள் ராம் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வீட்டின் முன்பாக உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் சுகந்தி. குடத்தில் தண்ணீர் பிடித்து, குடத்தினை ஒவ்வொன்றாக வீட்டின் வாசலில் தூக்கி வைத்தாள். தொடர்ச்சியாக மூன்று குடத்தை தூக்கி வைத்து விட்டு, நான்காவது குடத்தினை தூக்கிய நிலையில், குழாயினை அடைத்துக் கொண்டிருந்தாள். 
       அந்த நேரத்தில் பைலை ஓபன் செய்து பார்த்தபடியே, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ராம், குடத்தை கவனிக்காமல் குடத்தினால் கால் இடறி வாசலில் குப்புற விழுந்தான். இதைப் பார்த்ததும் சுகந்தி சிரித்தபடியே அவனே வந்து தூக்க, டிரஸோடு பைலும் நனைந்த கோபத்தில் இருந்த ராம் சுகந்தியை ஓங்கி அறைந்துவிட்டான். 
        கீழே என்ன இருக்கிறது என்று பார்த்து வராமல், தவறு செய்யாத தன்னையா அடிக்கிறாய் என்று கோபத்தில் சுகந்தியும் கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்கிக்கொண்டார்கள். 
      இந்த சம்பவத்தில் ராம் குடத்தை கவனிக்காதது தன் குற்றம் என்று ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சனை இந்த அளவு போயிருக்காது. அதேபோல குடத்தினை வழியில் வைத்தது தன் தவறு தான் என்று சுகந்தி நினைத்து இருந்தாலும் பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும். 
      இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விவாகரத்துகள் அனைத்தும் இதுபோன்ற சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்கே நடக்கிறது. ஆதலால் கணவன்-மனைவிக்குள் ஏற்படும் சிறிய பிரச்சினைகளில் கூட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வந்தால் இல்லறம் நல்லறமாகும். 

சுவாரசியமான சம்பவம் – நகைச்சுவை..!

     முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு சமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். 
    அச்சமயம் ஆங்கிலேயர் ஒருவர் கூட்டத்தின் மத்தியில் உரையாட தொடங்கினார். பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர், “இறைவனுக்கு ஆங்கிலேயர்கள் மீது தான் அன்பு அதிகம். அதனால் தான் மிகவும் ரசித்து அழகாக, வெண்மையாக எங்களை படைத்திருக்கிறார். அதனால் தான் நாங்கள் வெண்மை நிறத்தில் இருக்கிறோம்” என்று தற்பெருமையோடு பேசி முடித்தார். 
அந்த ஆங்கிலேயர் பேசி முடித்ததும் டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்தக் கூட்டத்திற்கு இடையே உரையாட தொடங்கினார். அப்பொழுது அவர் ஒரு குட்டி கதையை சொல்ல ஆரம்பித்தார். 
“இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்கினார். முதல் ரொட்டியை சுட்டார். ஆனால் அது சரியாக வேகவில்லை. அதனாலே சில பேர் வெள்ளையாய் பிறந்தார்கள். 
இரண்டாவதாக ஒரு ரொட்டியை சுட்டார். அது அதிக நேரம் சுடு பட்டதால் கருகிப் போனது. அதனால் சில பேர் கருப்பாய் பிறந்தார்கள். 
இறைவன் இப்படி இரண்டு மூன்று தடவை அனுபவத்திற்கு பின்னர், மூன்றாவது ரொட்டியை மிக சரியான பக்குவத்தில் தயார் செய்தார். அது அரை வேக்காடாகவுமில்லாமல், கரிஞ்சும் போகாமல் சரியான பக்குவத்தில் தயாரானது. அதன் காரணமாகவே இந்தியர்களாகிய நாங்கள் கருப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் சரியான நிறத்தில் பிறந்திருக்கிறோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். 
இதை கேட்டதும் அக்கூட்டத்தில் உள்ள அனைவரும் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினார்கள். முதலில் பேசிய ஆங்கிலேயருக்கு வெட்கமாய் போனது. 

திகிலூட்டும் பேய் கதைகள் – 07- கேரளத்து குறளி..!

ரமேஷ் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன். அவன், தனது கல்லூரி படிப்பினை, கேரளாவின் புகழ்பெற்ற நகரத்தின் மலைப் பகுதியில் அமைந்திருந்த கல்லூரியில் தொடர்ந்தான். 
அங்குள்ள விடுதி மாணவர்களோடு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டான். அங்கு தங்கியிருந்த சில நாட்களில் சில விஷயங்கள், அவனுக்கு முற்றிலும் விசித்திரமாக இருந்தது. 
அதில் ஒன்று, அங்கு உள்ள விடுதி மாணவர்கள் யாரும் இரவு நேரத்தில் துணையில்லாமல் தனியே வெளியே செல்வதில்லை. அவர்களும் இவனை தனியாக வெளியே செல்ல அனுமதிப்பதுமில்லை. சொந்த ஊரில் தனியாக சுற்றித்திரிந்த அவனுக்கு, இது வேடிக்கையாகவும் சற்று எரிச்சலை தூண்டக் கூடியதாகவும் இருந்தது. 
இது பற்றி யாரிடமாவது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தான். ஒரு சமயம் அவன் நண்பனிடம், “ஏன் இங்கு இரவில் தனியாக வெளியே செல்வதில்லை..? என்று கேட்டான். 
அதைக் கேட்ட அந்த மாணவன் சற்று பயத்தோடு, “இந்த மலைப்பகுதியில், இரவில் தனியாக செல்பவர்கள் வீடு திரும்புவதில்லை; மர்மமான முறையில் இறந்து கொண்டு வருகிறார்கள்.” என்று பதிலளித்தான். 
அப்படியா…! என்று சற்று நக்கலோடு ரமேஷ், அவனிடம் அது பற்றி விரிவாக சொல்லும்படி கேட்டுக்கொண்டான். 
அதற்கு அந்த மாணவன் இங்கு இரவில் சற்று மாறுபட்ட உருவத்தோடு “குறளி” என்று பேய் திரிவதாகவும், திருமணம் முடியாத இளைஞர்கள் தனியாக வந்தால் அவர்களது சங்கை கடித்து ரத்தத்தை உறிஞ்சி கொன்று விடுவதாகவும் நம்ப படுவதாக கூறினான். 
இதைக்கேட்டதும் ரமேஷ் சிரிக்க தொடங்கினான். உடனே அந்த மாணவன் ‘குறளி’ பற்றி பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை ஒன்றை காண்பித்தான். 
அதில் குறளி பற்றி பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. திருமணமாகாத இளம்பெண்கள் தீராத ஆசைகளோடு தற்கொலை செய்து கொண்டால் குறளியாக மாறுவதாகவும், தனியாக வரும் இளைஞர்களின் சங்கினை கடித்தது ரத்தத்தை உறிஞ்சி கொல்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. மேலும் குறளி அருகே நெருங்கும் பொழுது உளுந்தம் பயிறு வாசனை அடிப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. 
மேலும் அதில் குறளியின் கற்பனை உருவம் ஒன்று வரையப்பட்டிருந்தது. உடல் முழுதும் வெண்ன்மையாகவும், உடல் குட்டையாகவும், முகம் நீண்டும் கோரமான பற்களோடும், முடி நீண்டும் அதில் காணப்பட்டது. 
இதைக் கேட்டதும் ரமேஷ் மீண்டும் சிரிக்கத் தொடங்கினான். உடனே அந்த மாணவன், “நீ இதையெல்லாம் நேரில் கண்ட பிறகுதான் நம்புவாய். அப்பொழுதுதான் உனக்கு அது பற்றி தெரியும்” என்று கூறி சென்றான். 
அடுத்த இரண்டு நாட்களில் உள்ளூர் விடுமுறை ஒன்று அவசரமாக அறிவிக்கப்பட, உள்ளூர் மாணவர்கள் விடுதியில் இருந்து வீட்டிற்கு சென்றனர். 
ரமேஷ் மட்டும் விடுதியில் தனியாக தங்கி இருந்தான். அன்று இரவு திடீரென்று மின்சாரம் தடை பட்டு போனது. 
இரவு உணவை வாங்குவதற்காக சிறிய டார்ச் லைட் அடித்தபடியே விடுதியிலிருந்து சற்று தூரத்தில் உள்ள கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரமேஷ். 
கும்மிருட்டாக இருந்த அந்த மலைப்பகுதியில் ரமேஷின் காலடி ஓசை மட்டும் மெதுவாக கேட்டது. திடீரென்று காற்றின் ஓசை மெல்ல மாறத் தொடங்கியது. ரமேஷை யாரோ பின் தொடர்வது போல உணர, ரமேஷ் நடையின் வேகத்தை கூட்டினான். காற்றில் உளுந்தம் பயிறு வாசனை மெல்ல வீசத் தொடங்கியது. 
திடீரென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் கீழே விழ, அதை குனிந்து எடுத்தான் ரமேஷ். அந்த நேரத்தில் ரமேஷின் முன்பாக வெண்மையாக ஒரு உருவம் வந்து நிற்பதை ரமேஷ் உணர்ந்தான். அந்த பத்திரிக்கையில் பிரசுரித்தது போலவே அந்த உருவம் இருந்தது. 
இதைப் பார்த்து நடுங்கி போன ரமேஷ், அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். அடுத்த சில நிமிடங்களில் நிலைமை மோசமாகி போக அடுத்த நாள் செய்தித்தாளில் ரமேஷ் தலைப்புச் செய்தி ஆகிப்போனான். 

அற்புதமான நீதிக்கதை – மாட்டிற்கு நீதி கிடைத்தது..

       ஆரம்ப காலத்தில் மனிதன் மாட்டினை தன் தேவைக்காக பயன்படுத்த தொடங்கினான்.
       ஒரு நாள் மனிதன் உழுது கொண்டிருக்கும் பொழுது மாட்டிடம், பார்த்தியா..! நீ முன்னால் செல்கிறாய்… நான் பின்னால் வருகிறேன்.. விவசாய தொழிலில் எப்பொழுதும் நீ முன்னால.. நான் பின்னால… இதுதான் என் விதி.. என்று ஐஸ் மழையை பொழிய தொடங்கினான். இப்படி ஒவ்வொரு தடவையும், மாட்டிடம் பக்குவமாக பேசிப்பேசி, அதனிடம் வேலை வாங்க ஆரம்பித்தான் மனிதன். 
        மாடு, மனிதனிடம் “நீ என்ன பயிர் செய்யப் போகிறாய்?” என்று கேட்டதற்கு மனிதன், “நான் நெல் பயிரிட இருக்கிறேன்” என்றான். அனைத்து வேலைகளிலும் நீ முன்னிலையில் இருப்பதால். இந்த விளைச்சலில் முன்னால் வருவதை எல்லாம் உனக்கு அளிக்கப் போகிறேன்; பின்னால் வருவதை எல்லாம் நான் வைத்துக்கொள்ள இருக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்டதும் மாடு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
         தொடக்கத்தில் பச்சை பசேலென்று இருந்த பயிர்களை எல்லாம் மாடு பார்த்த பொழுது, இவை அனைத்தும் நமக்குத்தான் என்று நினைத்துக் மகிழ்ச்சி கொண்டது.
        அப்பொழுது மாட்டை பார்த்த மனிதன், “அவசரப்படாதே.. முன்னால் விளைகின்ற அனைத்தும் உனக்குத்தான் என்பதால் இப்பயிர்கள் அனைத்தும் உனக்குத்தான்” என்றான்.
      அறுவடை முடிந்தது. முன்னால் வந்த வைக்கோலை மாட்டுக்கு கொடுத்துவிட்டு பின்னால் வந்த நெல்லை மனிதன் வைத்துக்கொண்டான். 
         “இது சரியான நீதி இல்லை” என்று மனிதனிடம் மாடு கேட்டபொழுது, “சரி நெல்லிலும் நாம் பங்கிட்டுக் கொள்வோம்” என்றான். முதலில் போட்ட ஒப்பந்தத்தின்படி, இதிலும் “முன்னால் வருவது உனக்கு.. பின்னால் வருவது எனக்கு…” என்றான். அதன்படியே முன்னால் வந்த உமி, தவிடு மாட்டிற்கும், அரிசி மனிதனுக்கும் கிடைத்தது.
         “இதிலும் சரியான நீதி இல்லை” என்று மனிதனிடம் கேட்ட பொழுது. “சரி .. அரிசியை பங்கிட்டுக் கொள்வோம்.. உணவாக சமைக்கும் பொழுது முன்னால் வருவது உனக்கு.. பின்னால் வருவது எனக்கு..” என்றான். அதன்படி அரிசி வடித்த வடி நீர் மாட்டுக்கும், சோறு மனிதனுக்கும் கிடைத்தது.
         அனைத்திலும் ஏமாந்து போன மாடு, “ஒப்பந்தத்தை மாற்றிக் கொள்வோம் ” என்றது. “சரி… இனி முன்னால் வருவது எனக்கு… பின்னால் வருவது உனக்கு…” என்று மனிதன் கூறிக் கொண்டான். அடுத்த மாதம் பொங்கல் வந்தது. மனிதன் பொங்கல் தினத்தை மனிதனுக்கு என்று எடுத்துக்கொண்டான். அதற்கு அடுத்த நாளை மாட்டிற்காக மாட்டு பொங்கலை கொண்டாட வைத்தான்.
        அனைத்திலும் மனிதனின் சுயநலத்தால் ஏமாற்றப் பட்டோம் என்று மாடு நீதி தேவதையை பார்த்த பொழுது, நார்ச்சத்துள்ள வைக்கோலை தின்றதால் மலச்சிக்கலே வராத வரத்தை மாடு பெற்றுக்கொண்டது. மனிதன் மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டான்.
     சத்து குறைந்த அரிசியை மனிதன் தின்று தொப்பையை வளர்த்துக்கொண்டான். ஆனால் விட்டமின்களும் எண்ணெய் சத்துக்களும் கொண்ட தவிட்டை மாடு தின்று அதிக வலு பெற்றது.
        சக்தி மிகுந்த அரிசி கஞ்சி மாட்டுக்கு கிடைத்தது. அதில் சக்கையாக கிடைத்த சோறு மனிதனுக்கு கிடைத்தது.
சுயநலமிக்க மனித ஜாதியின் அநீதியில் நீதிதேவதை குறுக்கிட்டு திருத்தம் செய்து மாட்டிற்கு சரியான நீதியை வழங்கியது.

ஜோதிடத்தை நம்பலாமா..?

      இன்றைய காலகட்டத்தில் முற்காலத்தில் பின்பற்றி வந்த பல்வேறு பழக்க வழக்கங்கள் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறிவிட்டன. அவற்றில் ஜோதிடமும் ஒன்று. 
          ஜோதிடக்கலை, ஆன்மீகத்தோடு இணைந்த அற்புத கலையாகும். ஆனால் ஒரு சிலரால் அதன் மேன்மை குன்றிக் கொண்டே வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு காலகட்டத்தில் சிறிய அளவில் ஏமாற்றியவர்கள், இன்றைய காலத்தில் நாகரிகத்தோடு சேர்ந்து தொலைக்காட்சியில் வந்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று ஜோதிடர்களை பார்த்து குறை சொல்பவர்களும் உண்டு. ஜோதிடத்தை நம்பி சீரழிந்த வர்களும் உண்டு. அப்படி என்றால் ஜோதிடம் என்பது உண்மையானதா..? இல்லை.. ஏமாற்று வேலையா..? 
       ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையை கணிக்கும் உன்னத கலையாகும் . இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, எப்பொழுது சூரியன் உதிக்கும்..? எப்பொழுது சூரியன் மறையும்..? எந்தெந்த நாட்களில் பவுர்ணமி, அமாவாசை, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருகின்றது..? என்பதை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கம் என்று எழுதி வைத்து விட்டார்கள் என்றால் அவர்களின் ஞானத்தைப் பார்த்து வியப்பில் ஆழ்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. பஞ்சாங்கதோடு இணைந்ததை இந்த ஜோதிடக் கலையாகும். அப்படி என்றால் பஞ்சாங்கம் துல்லியமாக இருக்கும் பொழுது ஜோதிடம் ஏன் துல்லியமாக அமைவதில்லை என்று கேட்கலாம். 
         இன்றைய காலகட்டங்களில் இயற்கையான சுகப் பிரசவங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. பெற்றோர்களும் டாக்டர்களும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு பிள்ளைகளை பெற்றெடுக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அப்படி இருக்கையில் சரியான நேரத்தை கொடுத்தால் மட்டுமே நாம் துல்லியமான ஜோதிட பலனை அறிந்து கொள்ள முடியும். மேலும் நமது ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். 
         நமக்கு உடல் நலம் சரியில்லாத போது ஏதோ ஒரு மருத்துவமனையில் ஒரு டாக்டரை அணுகி சிகிச்சை பெறுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். சிகிச்சை சில நேரங்களில் நமக்கு பயணிப்பதில்லை. உடனே நாம் மருத்துவமே பொய்யானது என்று வாதிட்டுக் கொண்டு வீட்டிலேயே இருப்பதில்லை. உடனடியாக மற்றொரு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம். 
        அதைப்போலவே இன்றைய காலகட்டத்தில் போலியான ஜோதிடர்கள் பெருத்து விட்டார்கள். அவர்களால் சரியான ஜோதிட பலனை கணித்துக் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. ஜோதிடர்களை குறை சொல்லலாமே ஒழிய, எக்காரணத்தைக் கொண்டும் ஜோதிடத்தை குறை சொல்ல வழி இல்லை என்பதே என்னுடைய கருத்து. 

காவலர் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி..?

0
     இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் அரசு பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவு இருந்து வருகின்றது. அரசு பணிகளில் அதிகப்படியான சம்பளம், சலுகைகள், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து ஆகியவை கிடைப்பதால் இளைஞர்களின் நாட்டம் அதை சுற்றியே வருகின்றது.
     தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள், அரசு பணிகளுக்கு ஆட்கள் பிடிப்பதற்கென்றே வாகனத்தை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றித் திரிவார்களாம். அந்த நிலை இன்று மாறி, ஒரு காலி இடத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் போராடக்கூடிய நிலை இன்று வந்துள்ளது. இலட்சியமும், போராடும் குணமும் கொண்ட ஒரு சிலரே, அரசு பணியில் சேரும் கனவில் வெற்றி பெறுகிறார்கள்.
கீழ்காணும் சில அறிவுரைகளை உள்வாங்கிக் கொண்டு, கடினமாக உழைத்தால் நீங்களும் அரசு தேர்வில் வெற்றி பெறலாம்.
1)இலக்கை தீர்மானித்தல்
      தன்னால், எது முடியும் என்று தோன்றுகிறதோ…! எதை சாதிக்க முடியும் என்று மனது நம்புகிறதோ…! அத்தகைய இலக்கை முதலில் நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நல்ல உடலும், உயரமும் கொண்டிருப்பவர்கள், காவல்துறை அதிகாரியாக வரலாம். உடல் வலுவின்றி தேகம் மெலிந்தவர்கள், கணிதத்தில் கை தேர்ந்தவராக இருந்தால் வங்கி, புள்ளியியல் துறை போன்றவற்றில் தேர்ச்சி பெறலாம். குறிப்பிட்ட கல்வித் தகுதி உடையவர்கள், தங்களது கல்வித் தகுதிக்கு உட்பட்ட இலக்கை தீர்மானிப்பது நலம். சரி இதில் ஒருவர் காவல்துறை பணியில் சேர்வதே இலக்காக நிர்ணயித்துக் கொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.
2)தடைகளை அகற்றுதல
      இலக்கை நிர்ணயித்துக் கொண்டவன், முதலில் தன் இலக்கை அடைய விடாமல் தடுப்பது எது..? என்று கண்டறிந்து, அதனை முதலில் அகற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் முதல் எதிரியாக அமைவது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்கள் ஆகும் . இத்தகைய வலைதளங்கள் நமது இலக்கை அடைய விடாமல் தடுக்கும் என்றால், முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண கைபேசிக்கு மாறிவிடுங்கள். தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே ஸ்மார்ட் போனை கையில் எடுப்பேன் என்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இப்படி உங்கள் இலக்கு எதனால் தடம் மாறுகிறதோ, அவற்றை முதலில் நீக்கிவிடவேண்டும்.
3)திட்டம் வரைதல்
       காவல்துறை பணிக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவர், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்வு எழுதும் நாள் வரை உள்ள காலத்தை கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். நேரத்தையும் படிக்க வேண்டியவற்றையும் ஒப்பிட்டு, ஒரு நாளைக்கு எவ்வளவு பாடங்கள் படித்தாக வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
      எப்பொழுதும் ஒரு தேர்விற்கு, என்னைப்பொறுத்தவரை மூன்று முறை படிப்பது சாலச் சிறந்தது. அதாவது காவல்துறை பணிக்கு தமிழ், கணிதம் , வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ், வரலாறு, கணிதம் ஆகியவற்றை மூன்று முறை படித்தாக வேண்டும். முதல் முறை படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அடுத்த முறை எடுத்துக் கொள்ள அதிலிருந்து பாதி நேரம் எடுத்துக் கொள்ளும். கடைசி முறை திருப்பிப் பார்க்க தேர்வுக்கு முன்னாடி மூன்று நாள்கள் போதுமானது. ஆகவே இதை கருத்தில் கொண்டு கால திட்டத்தை வரையறுத்து கொள்ள வேண்டும்.
4)வளங்களை உருவாக்குதல்
        தேர்வுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களில் தேர்வுகளுக்கு என்று பிரத்யேகமான பல செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற தேர்வுகளுக்கு உதவும் பல்வேறு வளங்களை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
5)மனதினை தயார் செய்தல்
        எப்பொழுதும் படிப்பு.. படிப்பு.. என்று இராமல் தேவையான நேரங்களில் ஓய்வு எடுத்தல் அவசியமானதாகும். ஆகவே இடையிடையே பாடல் கேட்டல், நடைபயிற்சி, உறக்கம், குடும்பத்தினருடன் உரையாடுதல் உள்ளிட்டவை நன்மை பயக்கும். உடற்பயிற்சி, யோகா ஆகியவை மனதினை ஒழுங்குபடுத்தி கவனத்தை ஒழுங்குபடுத்தி, நாம் படித்தவற்றை மனதில் தங்க வைக்கும்.
6)ஊக்கத்தோடு செயல்படுதல்
        எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். நாம் கட்டாயமாக தேர்வில் வெற்றி பெறுவோம். நம்மைவிட இந்த தேர்வுக்கு கடினமாக உழைப்பவர் யார்..? நான் தோற்றால் வேறு யார் வெற்றி பெறுவார்..? என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து மனதினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது.
7)இறுதி கட்ட போராட்டம்
        தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, கட்டாயமாக இரண்டு முறை பாடத்திட்டங்களை படித்திருக்க வேண்டும். கடைசி ஒரு வாரம் படித்தவற்றை திருப்பி பார்க்க எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதி நேரங்களில் திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பது நலம் பயக்கும். போதுமான நேரங்களில் நன்கு தூங்கி உற்சாகத்தோடு தேர்வு எழுத செல்ல வேண்டும்.
லட்சக்கணக்கான  நபர்கள் கலந்து கொள்ளும் ஒரு போட்டி தேர்வில், நாம் தினமும் ஒரு மணி நேரம் அதிகமாக படிக்கப் படிக்க அந்த லட்சம் பேரில் ஆயிரம் பேரை முந்திக்கொண்டு வெற்றியை நோக்கி செயகிறோம் என்று அர்த்தம். அதனால் அதிக நேரம்
 படிப்பதற்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
      மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றி கடினமாக உழைத்தால் கட்டாயமாக அரசுப்பணியில் வெற்றி பெறுவீர்கள்….
                      வாழ்த்துக்கள்….. இறைவனின் ஆசி என்றும் உண்டு..

திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..!

திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..! 
      பல ஆண்டுகளுக்குப் பின் கிராமத்திற்கு வந்திருந்த சிறுவர்கள் இருவரும் அந்த கிராமத்து தோட்டத்து பகுதியில் மகிழ்வோடு சுற்றி திரிந்தார்கள். இறுதியில் அந்த ஊருணி கிணற்றை ஆசையோடு பார்த்தார்கள். எல்லா சிறுவர்கள் போலவும், அவர்களுக்கும் கிணற்றுக் குளியல் மீது அலாதி பிரியம். 
அரைப்பகுதி வரை நீர் மட்டம் கொண்ட அந்த விரிவான கிணற்றில், அந்த சிறுவர்கள் இருவரும் குதித்து நீந்தி மகிழ்ந்தார்கள். சிறிது நேர குளியலுக்குப் பின்னர் இருவரும் தென்னங்குரும்பல் போட்டு விளையாடத் தொடங்கினர். 
ஒரு கட்டத்தில் குறும்பல் தரையை அடையுவே அதை எடுக்க ஒருவன் ஆழம் வரை சென்று நீந்த குறும்பல் என நினைத்து மனித எலும்புபோடு ஒட்டி இருந்த கொலுசு ஒன்றினை எடுத்து வந்தான். 
அந்த எலும்பினை ஏதோ மட்டை என நினைத்து கொலுசினை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த எலும்பினை கிணற்றுக்குள் மீண்டும் வீசினர். கொலுசினை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிரித்தபடியே மேலே வந்தனர். 
அவர்கள் மேலே வருவதை கண்ட பெரியவர் ஒருவர், அவர்களைப் பார்த்து திகைத்தபடியே “நீங்க ஊருக்கு புதுசா” என்று கேட்டார். 
அதற்கு அந்த சிறுவர்கள், “இவ்வளவு வயதான போதிலும் எங்களை எப்படி வெளியூர்க்காரன்ண்ணு கரெக்டா சொல்றீங்க..? என்று கேட்டார்கள். 
அதற்கு அந்த பெரியவர், “வெளியூர் காரங்க மட்டும்தான் இந்த கிணற்றில் தெரியாம குளித்திருப்பார்கள்; இந்த கிண்ணத்தை பத்தி நல்லாத் தெரிஞ்ச உள்ளூர்க்காரர்கள் இந்தக் கிணற்று பக்கத்தில் கூட வரமாட்டார்கள்” என்று நடுக்கத்தோடு கூற, மீண்டும் கிணற்றை பார்த்தபடியே, “நீங்க உடனே இந்த இடத்தை விட்டு போயிருங்க” என்று கூற சிறுவர்களும் அதை அலட்சியமாக நினைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானார்கள். 
பெரியவர் சென்றதும் அந்த கிணற்றுக்கு ஒரு பெண் தண்ணீர் எடுக்க குடத்தோடு வந்தாள். சிறுவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டாள். அந்தப் பெண்ணிடம் அந்த சிறுவர்கள் இருவரும் அந்த கிணற்றை பற்றி கேட்க தொடங்கினர். 
உடனே அந்த இளம் பெண் கிணற்றை பற்றி பற்றி கூற தொடங்கினாள். “ஒரு காலத்தில் இந்த கிணறு ஊருக்கே தண்ணீர் வழங்கும் வரப்பிரசாதமாக இருந்தது. இந்தக் கிணற்றில் அடிப்பகுதியில் சகதி சுழல் ஒன்று இருக்கிறது. அதில் மாட்டிக் கொண்டால் யாரும் உயிர் தப்ப முடியாது. அந்த சுழலில் 5 வருடத்திற்கு முன்பாக ஒரு பெண் மாட்டிக்கொண்டு இறந்து விட்டாள். 
அவளது உடலை கூட அங்கே இருந்து எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் இறந்த சில தினங்களில் இந்த கிணற்றை சுற்றி அவளது நடமாட்டம் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கினர். ஆதலால் யாரும் இந்த கிணற்றருகே வரமாட்டார்கள்” என்று கூறினாள். 
இதைக் கேட்ட சிறுவர்கள் நக்கலாக சிரித்தபடியே அந்தப் பெண்ணிடம், “நீங்களும் இதெல்லாம் நம்புவீங்களா..? என்று ஏளனத்தோடு கேட்டார்கள். 
அதற்கு அந்த இளம்பெண், “நானும் முதலில் நம்பவில்லை. ஆனால் ஒருமுறை என் அண்ணன் இந்த கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க தொடங்கி இருக்கிறான். தண்ணீரில் ஏதோ ஒரு பெண்ணின் பிம்பம் தெரிந்திருக்கிறது. உடனே மேலே பார்த்திருக்கிறான். மேலே யாருமில்லை. 
மறுபடி தண்ணீரை பார்த்த பொழுது மீண்டும் பிம்பம் தெரிய, சற்று தயக்கத்தோடு மேலே பார்க்க, மேல யாரும் இல்லை. இப்படியே பல முறை நடந்திருக்கிறது. கடைசியில் அவன் தண்ணீரில் கைகளை விட்ட பொழுது அவன் கண்ணுக்கு முன்பாக ஒரு உருவம் முன்னாடி வந்து நின்றிருக்கிறது. அதை பார்த்து அலறியபடியே பத்து நாட்கள் காய்ச்சலில் இருந்து அதன் பின்னர் எப்படியோ மீண்டு விட்டான்” என்றாள். 
“சொந்த அண்ணனையே அவள் அப்படி பயங்காட்டி இருக்கா என்றால், மற்றவர்களை எல்லாம் விட்டு வைப்பாளா?” என அந்த இளம்பெண் கூற, அந்த சிறுவர்கள் இருவரும், “இந்த அக்கா முதல்ல அவங்க அண்ணன் கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க போனதா சொன்னாங்க. இப்போ அந்த பேயோட அண்ணனை பயங்காட்டி இருக்கான்னு சொல்றாங்க” என்று குழப்பத்தோடு யோசிக்க தொடங்கினார்கள். 
அப்படி என்றால் அந்த சகதியில் மாட்டி இறந்த இளம் பெண் இவளாக இருக்குமோ..! என்று அந்த சிறுவர்கள் யோசித்த பொழுது….. அந்த இளம்பெண் தன் கொலுசு இல்லாத கால் ஒன்றினை காட்டி “என் கொலுசை தா…” என்று கேட்டபடியே பயங்கரமாக சிரித்தாள். 
இதைக்கேட்டதும் பயத்தில் நடுங்கியபடியே அந்த சிறுவர்கள் கொலுசை போட்டு விட்டு, “தப்பித்தோம்… பிழைத்தோம்..” என அந்த இடத்தை விட்டு ஓட தொடங்கினர்.
error: Content is protected !!