TET ஆசிரியர்கள் போராட்டம்- கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

0
1820

TET ஆசிரியர்கள் போராட்டம்- கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் 149 அரசாணையை ரத்து செய்யுமாறு போராடி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களும் சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் போராடி வந்தனர். மேலும் பகுதி நேர ஆசிரியர்களும் சம்பள உயர்வு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் உச்ச கட்டத்தை கட்டிய நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பை உயர்த்தியும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனை பற்றிய முழு விவரங்கள் கீழே காணொளியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது கீழே உள்ள காணொளியை கண்டு பயன் பெறுங்கள்

CLICK HERE