TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-16(9TH CIVICS+ECONOMICS FULL)

0
2126

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-16(9TH CIVICS+ECONOMICS FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-16(9TH CIVICS+ECONOMICS FULL)

Welcome to your 9TH ECONOMICS AND CIVICS (NEW)

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
1.பின்வரும் கூற்றை ஆராய்க. 1. இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 2. இரண்டு ஆங்கிலோ – இந்தியர்களைக் குடியரசுத்தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்கிறார். 3. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2. இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?

3. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராமக்குழுக்கள் பண்டையக்காலத்தில் இருந்ததாக எந்த நூல் கூறுகிறது?

4. இந்தியாவில் மக்களாட்சி எத்தனை முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது?

5. பொருத்துக (1) உயர் குடியாட்சி – இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் (2) முடியாட்சி – இந்தியா, ஆஸ்திரேலியா (3) தனிநபர் ஆட்சி – சோவியத் யூனியன், சீனா, வெனிசுலா (4) சிறு குழு ஆட்சி – வாட்டிகன் (5) மதகுருமார்களின் ஆட்சி – வடகொரியா, சவுதி அரேபியா (6) மக்களாட்சி – இங்கிலாந்து, ஸ்பெயின் (7) குடியரசு – பூடான், ஓமன், கத்தார்

6. VVPAT – Voters Verified Paper Audit Trial – ஐ பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ஆண்டு……

7. NOTA-வை அறிமுகப்படுத்திய 14வது நாடு எது?

8. பொருத்துக: 1. ஒரு கட்சி முறை – இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி 2. இரு கட்சி முறை – சீனா, கியூபா, முன்னாள் சோவியத் யூனியன் 3. பல கட்சி முறை – அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

9. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?

10. தவறான கூற்றைத் தேர்ந்தெடு. 1. இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் உள்ளன. 2. அழுத்தக்குழுக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருப்பதைப்போல் இந்தியாவில் வளர்ச்சியடையவில்லை. 3. அழுத்தக்குழுக்கள் அரசியல்கட்சிகளின் கொள்கையைக் கொண்டுள்ளன.

11. "இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்." என்று _________ மனித உரிமையை வரையறுக்கிறது.

12. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப் போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும் ஐ.நா. சபை ___________ ஆண்டு தொடங்கப்பட்டது.

13. கூற்று 1: UDHR சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. கூற்று 2: UDHR பேரறிக்கையின் பொது விளக்கமானது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் அது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது.

14. கூற்று 1: ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள் ஆகும். கூற்று 2: பண்பாட்டு மகிழ்வில் சமத்துவம், மனித கண்ணியம், பாகுபாடின்மை ஆகியவற்றையும் பண்பாட்டு உரிமை உள்ளடக்கியுள்ளது.

15. கூற்று 1: குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவை ஆகும். கூற்று 2: நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிமக்கள் பங்காற்றும் அதிகாரத்தை அரசியல் உரிமைகள் அளிக்கின்றன.

16. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன. ஒற்றையாட்சி முறை அரசியல் அமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கம் இருக்கக்கூடும்.ஆனாலும் அதனை கூட்டாட்சி முறை எனக் கொள்ளலாகாது.

17. ஒற்றை ஆட்சி முறையின் நிறைகளுள் அல்லாதவை எது?

18. பூடானில் நடைபெறும் ஆட்சி முறை என்ன?

19. நேபாளத்தில் முடியாட்சி முடிவு பெற்று மக்களாட்சி துவங்கிய மாதம் மற்றும் ஆண்டு எது?

20. மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தை பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் என்பவரால்……….. ஆண்டு உருவாக்கப்பட்டது.

21. கிராமப்புறங்களின் பிரதிநிதிகளை மக்களாகக் கொண்ட கிராம சுயராஜ்ஜியத்தை உருவாக்க விரும்பியவர்….

22. தவறான கூற்றைத் தேர்ந்தெடு. 1. ஒவ்வொரு ஊராட்சியிலும், அவ்வூராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட மக்களே கிராம சபை உறுப்பினர்களாக இருப்பர். ஊராட்சித்தலைவர் தலைமை தாங்குவார். 2. கிராம ஊராட்சிகளின் உருவாக்கம் என்பது ஒரு சமூக இயக்கமாகவே இருந்தது.விடுதலைப்போராட்டத்தின் போது பஞ்சாயத்து சீரமைப்பு என்பது மக்களுக்கு நம்பிக்கைகை ஊட்டியது. 3. கிராம சபைக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளும், திட்டங்களினால் பயனடைந்தோர் பற்றியும் கலந்துரையாடப்படும்.

23. பெரியார் எந்த ஆண்டிலிருந்து ஈரோடு நகராட்சியின் தலைவராக பதவி வகித்தார்?

24. இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர்………………………………..

25. புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சிறப்பம்சங்கள் யாவை?

26. உலகின் மிக மோசமான சாலை விபத்துக்களைக் கொண்ட நாடு எது?

27. சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களுக்கான முக்கிய காரணங்களையும் அதற்கான சதவீதத்தையும் பொருத்துக. (1) அதிவேகம் – 5% (2) குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது – 24% (3) வாகன எண்ணிக்கை அதிகரிப்பு – 15% (4) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் – 40% (5) தலைக்கவசம் மற்றும் இருக்கைப்பட்டையை குறைவாகப் பயன்படுத்துவது – 16%

28. இந்தியா விபத்துக்கள் அறிக்கை 2016ன் படி, சாலை விபத்துக்களில் முதலில் உள்ள நகரம்…………………..

29. சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (1) சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் ஓட்டுனர், பாதசாரிகள், பயணிகள், வாகனங்கள், சாலையின் நிலை மற்றும் வானிலை ஆகும் (2) இருக்கைப்பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பை 51% தடுக்கலாம்.

30. கூற்று: 2016 விபத்துக்கள் அறிக்கையின்படி, மிக அதிகமான நபர்கள் இறப்பதற்கு அதிகமான இரு சக்கர வாகனப்பயன்பாடாகும். காரணம்: மாட்டுவண்டி, கையால் இழுக்கப்படும் வண்டி, மிதிவண்டி போன்ற மற்ற வாகனங்களைப் பயன்படுத்தினால் சாலை இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்.

31. கூற்று 1: பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது. கூற்று 2: உயர்ந்த வருவாய், தரமானக் கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை, நிலைத்தச் சமவாய்ப்பு போன்றவை வாழ்க்கைத்தரத்தில் மேம்பாட்டைக் குறிக்கிறது.

32. கூற்று 1: தனிநபர் வருமான உயர்வு எப்போதும் மொத்த உண்மையான உற்பத்தியின் உயர்வு என்று பொருள்படும். கூற்று 2: தனிநபர் வருமானமே நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்.

33. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

34. நிலையான பொருளாதார மேம்பாடு என்பது, தற்போதுள்ள __________ ஐ சேதப்படுத்தாமல் மேம்பாடு அடைய வேண்டும்.

35. அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் ___________ ஐ அதிக அளவு வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

36. கூற்று 1: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளன. கூற்று 2: நன்கு வளர்ந்த நாடுகளில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் குழுவின் பங்கு சிறியதாகவும், தொழில் மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் குழுவின் பங்கு பெரிதாகவும் இருக்கும்.

37. 1972 – 73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, சராசரியாக _________ அளவுக்கு உயர்ந்துள்ளது.

38. வேலைவாய்ப்பின்மை சிக்கலைத் தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை" அமைத்த டெல்லி சுல்தான்………………….

39. பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும், ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ____________ எனப்படும்.

40. தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஒழுங்கமைக்கப்படாத துறைகள்)

41. கூற்று 1: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளன. கூற்று 2: நன்கு வளர்ந்த நாடுகளில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் குழுவின் பங்கு சிறியதாகவும், தொழில் மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் குழுவின் பங்கு பெரிதாகவும் இருக்கும்.

42. "பொருள் வருகின்ற வழி சிறிதாயினும் கேடு இல்லை. போகின்ற வழி அதனை விடப் பெருகக் கூடாது" என பொருள் தரும் குறள்………………

43. கூற்று 1: நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது. கூற்று 2: ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு வேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

44. கூற்று 1: தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு மற்றும் நறுமணப்பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. கூற்று 2: மிளகு மற்றும் நறுமணப்பொருட்கள் அதிகம் இடம்பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்றே அழைக்கப்பட்டது.

45. 2011 ஆம் ஆண்டில் ஏறத்தாழ _____ விழுக்காடு பெண்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.

46. உலக அளவில் மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ள நாடு………………

47. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக. i) தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகள் ஆவர். ii) சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. iii) இந்தியாவில் குறுவிவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. iv)தமிழகத்தில் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

48. சரியான தொடரை எழுதுக. 1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர். 2. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்புறங்களில் அதிகம். 3. இடம்பெயர்வின் நகர்வானது, ஒரே மாதிரியான உள்நகர்வினைக் கொண்டதாகும். 4. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.

49. தமிழ்நாட்டிலிருந்து _____ பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

50. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக. i) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர். ii) சர்வதேச குடியேறுபவர்களில் 15% ஆண்களாகவும், 85% பெண்களாகவும் உள்ளனர். iii) இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடை பெற்ற ஆண்டு 2015. iv) மக்கள் ஒருபோதும் கிராமப் புறங்களுக்கு இடப் பெயர்ச்சி செய்வதில்லை .