
சாகித்திய அகாடமி விருது பற்றிய முக்கிய குறிப்புகள் -TNPSC NOTES
இது இந்திய அரசின் ஒரு தன்னாட்சி அமைப்பு
இதன் தலைமையகம் -டெல்லி
இதன் தற்போதைய தலைவர் சந்திர சேகர கம்போரா
இந்தியாவில் 24மொழிகளில் சிறந்த படைப்புக்காக விருதுகள் வழங்கப்படுகிறது.
முதல் விருது வழங்கப்பட்ட ஆண்டு -1955
முதல் விருது பெற்ற நூல் தமிழின்பம் -ரா பி சேதுப்பிள்ளை
இரண்டு முறை வாங்கியுள்ள எழுத்தாளர் -சிற்பி பாலசுப்பிரமணியம்
அதிக விருதுகளை பெற்ற மாவட்டம் -திருநெல்வேலி
2021-இல் பெண் தமிழ் எழுத்தாளர் அம்பை-க்கு சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்னும் சிறுகதை தொகுப்புக்கு கிடைத்துள்ளது.
அம்பை சாகித்திய விருது பெறும் நான்காவது பெண் எழுத்தாளர்
அம்பையின் இயற்பெயர் -சி எஸ் லக்ஷ்மி
அம்பை எழுதிய முதல் நூல் நந்திமலைச் சாரலிலே
அம்பை உருவாக்கி செயல்படுத்தி வரும் அமைப்பின் பெயர் -SPARROW
