Home TNPSC பொதுத்தமிழ் முக்கிய வினாக்கள்-01

பொதுத்தமிழ் முக்கிய வினாக்கள்-01

0
  1. பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை.சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும்,சொல்லின் வடிவாக உன் இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியையும் இகழ்ந்து விட்டான் என்று சினத்துடன் கூறியவர் யார்?

இடைக்காடனார்

  1. இறைவன் யாருக்கு மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்?

கபிலருக்கும்,இடைக்காடனாருக்கும்

  1. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

  1. மாசற வசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூறு வரியை பாடியவர் யார்?

மோசிகீரானார்

  1. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

பரஞ்சோதி முனிவர்

  1. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

3 (மதுரைக் காண்டம், கூடற்காண்டம் , திருவாலவாயக் காண்டம்)

  1. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

64

  1. பரஞ்சோதி முனிவர் காலம் என்ன?

17-ம் நூற்றாண்டு

  1. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

திருமறைக்காடு (வேதாரண்யம்)

  1. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

வேதராண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா

  1. மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர்?

பரஞ்சோதி முனிவர்

error: Content is protected !!
Exit mobile version