Home கல்வி செய்திகள் 2021-22 கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் குறைப்பு-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2021-22 கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் குறைப்பு-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

0

நடப்பு கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறப்பது தாமதமாகி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பாடத்திட்டத்தில் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

1 முதல்‌ 8-ம்‌ வகுப்பு வரை 40முதல்‌ 50
சதவீதம்‌ வரை பாடங்கள்‌
குறைக்கப்பட்டுள்ளன. 9-ம்‌ வகுப்புக்கு 38
சதவீதம்‌, 10-ம்‌ வகுப்புக்கு 39 சதவீதம்‌, 11
மற்றும்‌ 12-ம்வகுப்புகளுக்கு தலா 35
சதவீதம்‌என்ற விகிதத்தில்‌ பாடத்திட்டம்‌
குறைக்கப்பட்டுள்ளது. இதன்‌
அடிப்படையிலேயே தேர்வுகள்‌ நடத்தப்படும்‌.
அதேநேரம்‌ போட்டித்‌ தேர்வுகளை எழுத
விரும்பும்‌ மாணவர்கள்‌ அதற்கேற்ப முழு
பாடத்தையும்‌ படித்து தேர்வுக்கு தயாராக
வேண்டும்‌. பள்ளிகள்‌ எப்போது
திறக்கப்படுகிறதோ அப்போது
மாணவர்களுக்கு 50 நாட்கள்‌, ஏற்கெனவே
கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்திய
பாடங்களை மீண்டும்‌ ஒருமுறை நினைவூட்டப்படும்‌. இவ்வாறு அதில்‌ கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Exit mobile version