கொரோனா எதிரொலி , அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு.

0
391
Grungy background or texture with dark vignette borders

மார்ச் 22, கொரோனா காரணமாக 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வந்தது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்புகளை ஆன்லைனில் மட்டும் நடத்த அறிவுறித்தியுள்ளது.

பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளை இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு.